Monday, 22 May 2023

சாதி தீண்டாமை நீடிப்பதற்கான காரணம்

 தோழர்கள் சாதி தீண்டாமை  நீடிப்பதற்கான காரணம் மிகத் தெளிவாக கோட்பாட்டு ரீதியில் நிறுவிவிடுவர் ஆனால் இந்த கொடூரமான நிலை இன்றும் ஏன் தொடர்கிறது என்றால் விளக்கும் நாமே மக்கள் மத்தியில் செயல்படாமல் உள்ளதனால் இந்த கொடுமை நிகழ்கிறது என்பேன்.

இதோ நான் கேட்ட கேள்விகளக்கு பதிலளிதுள்ள சில தோழர்களின் பதில் கீழே:-

1). இடைநிலைச் சாதிகளின் அதிகாரத்துக்கு முட்டுக்கொடுக்கும் கட்சிகள் தொடர்ந்து 60 ஆண்டுகளாக பதவியில் இருப்பதுதான்.

2). சாதி சமூகமுத்திற்கும், அதனில் ஆதிக்கம் செலுத்தி வந்த சாதிகளுக்கும் தங்கள் கொண்டிருந்த அதிகாரம் கேள்விக்குள்ளாகி வருகின்றன.

3). இதனை தாங்கி கொள்ள முடியாத சாதியவாதிகள் வெறியுணர்வோடு செயல்படுகின்றனர்.

4). RSS பிஜேபி சக்திகளின் கிராமப்புற அரசியல் கட்டமைப்பும் வெறுப்பு பிரச்சாரமும்,சாதிய கழகமும்,,நமது அரசியல் கட்டமைப்பு தோல்வியும் தான் காரணம் தோழர்.

5). பாரதிய ஜனதா கட்சியின் பங்களிப்பு மற்றும் நாம் தமிழர் கட்சியின் சாதி பெருமை இவையெல்லாம் கிராமத்துக்குள் எதிரொலிக்க தொடங்கியிருக்கிறது

6). போகவேண்டிய பாதையை விட்டு அடையாள அரசியலுக்குள் சமூகத்தை கரைப்பதே.

தோழர்கள் கூறியுள்ள எல்லாம் சரியானவைதான் இருந்தும் அந்த முரண்பட்டுள்ள சூழலை நாம் அணுகி அதற்க்கு தீர்வு தேட வேண்டாமா?

வெட்டிவிவாதத்தில் வீரர்களாக உள்ள பலரும் உண்மையான உழைக்கும் மக்களுக்கிடையிலேன பிரச்சினையை அணுகி புரிந்து செயல்படுவதில்லையே..

அதே நேரத்தில் புரட்சிகர இயக்கங்கள் மக்கள் மத்தியில் இயங்காமையும் ஒரு காரணம் என்பதனை அவர்களுக்கும் தெரியாதவை அல்ல.

சாதி சாயம் பூசி உழைக்கும் மக்களை கூறு போட்டு அவர்களின் பிரச்சினைகளை நீர்த்து போக செய்வதுதான் இந்த ஆளும் வர்க்கத்தின் நோக்கம். அதில் வெற்றியும் கண்டுள்ளது. மக்களை மத சாதிய பிரிவினை மூலம் அதனை சாதித்துக் கொண்டும் உள்ளது. அதனை முறியடிக்க முயலுவோர் முதலில் மக்களை படியுங்கள் என்பேன்....

மக்களின் அடிப்படையான பிரச்சினையான கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்க்கையை உத்திரவாதபடுத்தும் உரிமை பிரச்சினையை பற்றி பேசி களத்தில் இறங்கி அவர்களை ஒன்றினைத்து போராடாமல் அவர்களை கைவிட்டுவிட்டு: ஆளும் வர்க்கம் செயலாற்றும் ஒவ்வொரு செயலுக்கும்  வாழ் பிடித்துக் கொண்டுள்ளவை சமூக மாற்றதிற்கான வழியில்லையே?.

இங்கே கம்யூனிஸ்ட் என்பவர்களும் பாராளுமன்றதிற்குள்ளே செயல் பட்டிருக்கும் முதலாளித்துவ கட்சிகளாக மாறிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் அவர்களும் ஓட்டரசியல் செய்ய தொடங்கிவிட்டனர் வர்க்க அரசியலை கைவிட்டு என்று எண்ண தோன்றுகிறது.

பாராளுமன்ற பாதையில் பயணிக்கும் CPI,CPM, CPI(ML) கனுசன்யால் CPI(ML)லிபரேசன் CPI(ML)ரெட்ஸ்டார் மற்றும் தி.மு.காவின் B -Team மாகசெயல்படும் பல்வேறு மா-லெ பேசும் இயக்கங்கள் இதில் இல்லாத சிலரும் இன்றைய ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு பயந்து தனது அமைப்புகளை பாதுகாப்பாக வைத்துக் கொண்டே மக்கள் மத்தியில் களமாடுகின்றனர். அதனால் ஆளும் வர்க்கம் மக்களுகான வாழ்வியல் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் மூட நம்பிக்கையையும் பிற்போக்கு கலாச்சாரங்களையும் மக்கள் மத்தியில் விதைகிறது. மக்களும் அந்த சிந்தனைக்கு அடிமையாகின்றனர். நிலத்திலிருந்து விடுபடாத கிராம விவசாய மக்கள் தங்களின் இந்நிலைக்கு காரணம் நம்மை ஆள்பவர்களின் சூழ்ச்சி என்று அறியாமல் அவர்கள் விரிதுள்ள விசவலையில் சிக்கியுள்ளனர். உழைக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்சினை முன் வந்துவிட கூடாது என்பதற்கு அவர்களிடையே சாதி பிரச்சினையை தூண்டி விடுவது அதை மிகத் தெளிவாக அந்தந்த ஜாதி கட்சி செய்கிறது என்றால் அதே வேலையை இந்த இந்த இடதுசாரி இயக்கங்களும் தெளிவின்றி வால்பிடித்து கொண்டுள்ளது.

கோயில் குடமுழுக்கு மற்றும் செப்பனிட  கோடிக் கோடியாக கொட்டிக் கொடுக்கும் ஆட்சியாளர்கள் மக்கள் வளர்ச்சி பணிக்கென்னவோ நிதியளிப்பதில்லை. வேலையின்றி படித்த கூட்டம் எங்கெங்கும் அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டிய பல்வேறு தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கிறது அதனை ஏன் ஆட்சியாளர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிபதில்லை?. இன்றைய உலகமய மாக்கலில் பள்ளிகள் தனியார்மயம் மருத்துவம் தனியார் மயம் ஆனால் கோயில் மட்டும் நிதி ஒதுக்கும் இவர்கள் அந்த மக்களின் வாழ்வியல் பிரச்சினையை தீர்க்க முயலுவதேயில்லை!  இங்கேதான் ஒழிந்துள்ளது இந்த ஏற்ற தாழ்வான சமூகத்தை கட்டிக் காக்கும் தந்திரம்.

கிராமபுறங்களில் ஏற்படும் பூசல்களுக்கு முக்கிய காரணமே மக்கள் வேலையின்றி தவிப்பதுதான் அதற்கு வழிவகை செய்ய வக்கற்ற அரசு ஜாதி கட்சிகளை கையாள்கிறது மக்கள் வயிற்று பிரச்சினையை தீர்க்க வக்கற்ற இவர்கள், ஜாதி பிரச்சினையை முன்னுக்கு கொண்டுவந்து அதை சமூக பிரச்சினையாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சினையாக்கி அந்த மக்களை இந்த சுழலுகுள் சிக்க வைக்கும் தந்திரமே.               

அதில் எல்லா ஜாதி கட்சிகளும் தனகளித்துள்ள வேலையை கச்சிதமாக செய்து முடிக்கிறது. தன் ஜாதி மக்களின் பிரசினைக்கு காரணம் அந்த ஜாதி மக்கள்தான் என்று திசைதிருப்பி விடுகிறது, அதற்கான கதை களத்தை அமைத்து உழைக்கும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை ஜரூரா செய்கிறனர். மேலும் ஜாதி கட்சி தலைவர்கள் ஏதோ தேவதூதர்கள் போல் வலம் வருகின்றனர் என்றால் ஆங்காங்கே குட்டி தாதாகள் ஊர் மட்டத்தில் எல்லா கட்டை பஞ்சாயித்து வேலைகளையும் ஜாதிக்காக செய்கின்றனர் பின் இந்தஒட்டுண்ணி கூட்டம் அந்த மக்களின் இரத்தத்தை உறிஞ்சவும் செய்கிறது. 

ஜாதியம் என்பது அடிப்படையில் மக்களை பிளவுப் படுத்தி ஒடுக்கும் செயற்பாடுகளுக்கான ஒரு கருத்தியல்அதேவேளை பிளவுண்ட குழுக்கள் வேற்றுமைக் கூறுகளைப் பேணியபடி ஒரே சமூக அமைப்பாகச் சேர்ந்து இயங்க வகை செய்வதும் அந்தக் கருத்தியலுக்கான அடிப்படைப் பண்பாகும்.

பிளவுபடுத்தலை முறியடித்து அனைத்து மக்களையும் ஒன்று படுத்துவது சாதியத்தை தவிர்ப்பதன்  முன் நிபந்தனையும் முடிவான இலட்சியம் ஆகும்சாதிய உணர்வுகளை விட்டொழிந்து புத்துலகம் படைக்கும் உணர்வுடன் அனைத்து ஜாதியினரும் ஒன்றுபட்டு போராடுவது சாத்தியமானதா? சாதியை பேணும் சாதிக்கு எதிராக போராட வேண்டும் என்கிற வகையில் ஆதிக்க சாதி எதுவாயினும்  எதிரி நிலைக்குரியதாக இருக்குமல்லவாஅத்தகைய ஆதிக்க ஜாதிக்கு எதிராக தானே ஏனைய ஜாதிகளை ஐய்கியப்படுத்தி  போராட முடியும்!!! .

இந்த போராட்டம் ஜாதிக்கு எதிரானதா அல்லது ஒடுகப்பட்ட வர்க்க ஒற்றுமைகானதா? எனும் பொழுது சாதித் தகர்பில்புரிந்து களமாட வேண்டியது. அதிகார வர்க்கமாக பல்வேறு ஜாதிகளிலிருந்து பிரதிநிதிகள் இருப்பது போல ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களும் அனைத்து ஜாதிகளும் உள்ளனர். அதிகாரத்துவ சமூக அமைப்பு பேணும் ஜாதியத்தை தகர்க்கும் பொருட்டு வர்க்க அடிப்படையிலான பல்வேறு அரசியல் காரணிகள் ஒடுக்கு முறைக்கு ஆட் படுகிற அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த மக்களை ஓரணியில் ஒன்றிணைத்து போராட வேண்டியுள்ளது இதனை மனதில் கொள்ள வேண்டிய விசயம். 

No comments:

Post a Comment